For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சினிமா பாணியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பிராண்டட் காலணிகள் திருட்டு: 3 பேர் கைது!...

07:57 AM Jan 05, 2024 IST | Web Editor
சினிமா பாணியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பிராண்டட் காலணிகள் திருட்டு  3 பேர் கைது
Advertisement

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நைக் நிறுவனத்தின் காலணிகளை திருடிய 3 பேரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

Advertisement

புகழ்பெற்ற நிறுவனங்களின் கிடங்குகளில் பணிபுரியும் ஆசாமிகள், ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்கள் வேலை செய்த பிறகு, புகழ்பெற்ற பிராண்டுகளின் காலணிகள் மற்றும் ஆடைகளைத் திருடுவது வழக்கம். இதேபோல், ஆனேக்கல், அத்திபள்ளி அருகே உள்ள நைக் ஷூ கிடங்கில் வேலைக்குச் சேர்ந்த சலே அகமது லஷ்கர், பதினைந்து நாட்கள் பணியாற்றி, டெலிவரிக்கு மதிப்புமிக்க பிராண்டட் ஷூக்களை எருத்து செல்லும்போது திருடியுள்ளார்.

இது தொடர்பாக அத்திபள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த பின்னர், குற்றவாளியின் பின்னால் இருந்த போலீஸார், ஜிபிஆர்எஸ் சோதனை செய்து டெலிவரி வாகனத்தைக் கண்டுபிடித்தனர். சிக்கஜாலா அருகே தரபனஹள்ளி என்ற இடத்தில் காலி டெலிவரி வாகனத்தை விட்டுவிட்டு கதர்நாக் கதீம் தப்பியோடினார். தற்போது அந்த வாகனத்துடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நைக் நிறுவனத்தின் காலணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், திரைப்பட பாணியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் ஷூ மற்றும் துணிகளைத் திருடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபான் பாஷா (30), மன்சார் அலி (26), ஷாஹிதுல் ரஹ்மான் (26) ஆகியோரை  அத்திபள்ளி காவல் நிலைய போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மீதமுள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement