Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை கொலை செய்த இளைஞர் - உசிலம்பட்டியில் பரபரப்பு!

07:08 AM Jul 03, 2024 IST | Web Editor
Advertisement

உசிலம்பட்டி அருகே இடத்தகராறு காரணமாக கோயில் பூசாரியை இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் அதே ஊரில் உள்ள அங்காள ஈஸ்வரி கோயிலில் பூசாரியாக உள்ளார். அப்பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான 40 சென்ட் இடம் இந்த கோயிலின் அருகே உள்ளது. இதில் 10 சென்ட் இடம் கோயில் இடத்தில் உள்ளதால், அது கோயிலுக்கு சொந்தம் என பூசாரி பவுன்ராஜ்க்கும் முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 2) இரவு கோயிலில் உள்ள விளக்குகளை போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த பூசாரி பவுன்ராஜை கோயில் முன்பு மறித்த முருகன், இந்த இடப்பிரச்னை தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு கூறி பூசாரி பவுன்ராஜ் தெரிவிக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூசாரியை தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த பூசாரி பவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த முருகனைக் கைது செய்து தொடர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இடத்தகராறில் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
killedLandMaduraitemple priestusilambatti
Advertisement
Next Article