உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது! வாடிவாசலில் சீறி வரும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்!
07:39 AM Jan 15, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             இதனைத் தொடர்ந்து இன்று காலை உலக புகழ்பெற்ற மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா என பலர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற உடையணிந்து வீரர்கள் களமிறங்கினர். இதனை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடந்து  வருகிறது. வாடிவாசலில் சீறி வரும் காளைகளை காளையர்கள் தீரடத்துடன் அடக்கி வருகின்றனர். சில காளைகள் யாரும் தொட முடியாத வகையில் வாடிவாசலில் நின்று விளையாடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.
        
    
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.
                 Advertisement 
                
 
            
        ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 Next Article