For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம் - நடந்தது என்ன?

தெரு நாய்கள் துரத்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
07:45 AM Aug 27, 2025 IST | Web Editor
தெரு நாய்கள் துரத்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
தெரு நாய்கள் துரத்தியதால் நடந்த விபரீதம்   நடந்தது என்ன
Advertisement

Advertisement

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில், தெரு நாய்கள் துரத்தியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவம்:

கடையநல்லூரைச் சேர்ந்த ராதிகா, மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். நேற்று குழுப் பணத்தைப் பிரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை சில தெரு நாய்கள் துரத்தியுள்ளன. இதனால் பயத்தில் அதிவேகமாக வண்டியை இயக்கியபோது, நிலைதடுமாறி வாறுகாலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.

சிகிச்சை:

இந்த விபத்தில், ராதிகாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காகச் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement