அறையை விட்டு வெளியே வராத மகன்... கதவை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... திருப்பூரில் பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் கொங்கல்நகரம் பகுதியைச் சேர்ந்தவர் சபரீசன் ( வயது 35). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே குடும்ப பிரச்னை காரணமாக இவர் மனைவியை விட்டு பிரிந்து கொங்கல் நகரம் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று (ஜூன் 30) காலை நீண்ட நேரம் ஆகியும் தான் தங்கியிருந்த அறையை விட்டு சபரீசன் வெளியே வரவில்லை.
இதனால் அச்சமடைந்த அவரது தாயார் கதவை திறந்து பார்த்தார். அப்போது,
சபரீசன் கழுத்தில் வெட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சபரீசன் உடலை மீட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மோப்பநாய் டெவில்
வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தடவிகள் நிபுணர்கள் கைரேகை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தரப்பில் தனி படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வீட்டில் இருந்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.