திருமணமான 9வது நாளில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி... நடந்தது என்ன?
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (30). இவரது சொந்த ஊர் செஞ்சி. பி.எஸ்.சி., பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த ஷாலினி (26) என்பவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி
நங்கநல்லூரில் திருமணம் நடைபெற்றது. ஷாலினி பி.காம். பட்டதாரியாவார். இருவரும் தங்களது சொந்த ஊரான வந்தவாசி மற்றும் செஞ்சிக்கு மறுவீடு சென்றுவிட்டு நேற்று (ஜுன் 6) வீடு திரும்பினர்.
இதற்கிடையே, ஷாலினி தனக்கு தலைவலிப்பதாகவும், மாத்திரை வாங்கி வரும்படியும் கணவரிடம் கூறினார். ஜெகன்நாதன் மாத்திரை மற்றும் உணவு வாங்கி கொடுத்துவிட்டு அதே பகுதயில் வசிக்கும் தனது சகோதரி விஜயா என்பவரின் வீட்டிற்கு சென்றார். மதியம் சாப்பாட்டிற்கு தனது சகோதரி வீட்டிற்கு அழைப்பதற்காக அவர் ஷாலினிக்கு போன் செய்தார். பல முறை தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்காததால் அச்சமடைந்த அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தார்.
நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த ஜெகன்நாதன் ஜன்னலை திறந்து பார்த்தபோது, ஷாலினி அறையில் தூக்கில் தொங்கினார். அதிர்ச்சியடைந்த உடனடியாக ஜெகன்நாதன் இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்
கதவை உடைத்து ஷாலினியை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவரின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
வைத்தனர். இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 9 நாட்களே ஆகி உள்ளதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.