Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் - தடுத்த கணவருக்கு வெட்டு!

09:00 AM Feb 12, 2024 IST | Web Editor
Advertisement

அரக்கோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையனை தடுக்க முயன்ற கணவரை வெட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (42). இவர் தனியார் கம்பெனி தொழிலாளி ஆவார். இவரது மனைவி ரூபா (38). இவர்கள் இருவரும் திருத்தணியில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, பேருந்தில் அரக்கோணம் தாலுகா பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரூபா கால் வலியால் மெதுவாக நடந்து செல்ல மனைவிக்கு முன்பாக 10 அடி தொலைவில் தனஞ்செழியன் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டிருந்த கொள்ளையன் திடீரென ரூபா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் செயினை பறிக்க முயன்றுள்ளான். அப்போது செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டு ‘திருடன் திருடன்’ என ரூபா கூச்சலிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கொள்ளையன் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் தனஞ்செழியன் கொள்ளையனின் சட்டையை பிடித்து இழுக்க முயன்றார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனஞ்செழியனை வெட்ட முயன்ற போது அவர் கத்தியை கெட்டியாக பிடித்துள்ளார். கத்தியை கொள்ளையன் இழுத்ததில் தனஞ்செழியனின் கை விரல்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்
சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி
கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்று
விசாரித்து வருகின்றனர்.

Tags :
arakkonamchain snatchingCrimeNews7Tamilnews7TamilUpdatesranipet
Advertisement
Next Article