For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கோட்' திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

01:29 PM Jul 29, 2024 IST | Web Editor
 கோட்  திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
Advertisement

விஜய் நடிக்கும் 'கோட்' திரைப்படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய அப்டேட் கொடுத்துள்ளார். 

Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68-வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘கோட்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்து முடிந்தது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையே, அண்மையில், ‘கோட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதையும் படியுங்கள் : டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ளம் புகுந்த விவகாரம் : மேலும் 5 பேர் கைது

இதனிடையே எக்ஸ் தளத்தில், " அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்" என எக்ஸ் தள பயனர் ஒருவர் கேட்டிருந்தார். இந்நிலையில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி ‘கோட்’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இது, 3-வது பாடலின் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement