For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அத்யாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படாது” - அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

10:04 AM Apr 05, 2024 IST | Web Editor
“அத்யாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படாது”   அமைச்சர் மன்சுக் மாண்டவியா
Advertisement

‘அத்தியாவசிய மருந்துகளின் விலை இந்த நிதியாண்டில் உயர்த்தப்படாது’ என மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

Advertisement

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட உள்ளதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை.  மருந்துகளின் மொத்த விலை (டபிள்யு.பி.ஐ) குறியீட்டின் அடிப்படையில், மருந்துகளின் விலை உச்ச வரம்பை மத்திய மருந்துகள் துறையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்கிறது.

பணவீக்கம் அதிகரிக்கும்போது, மருந்துகளின் விலை உயரும்.  ஆனால், இந்த நிதியாண்டில் பணவீக்கம் உயரவில்லை.  0.005 சதவீதம் என்ற மிகச் சிறிய அளவிலேயே பணவீக்கம் உயர்ந்துள்ளது.  எனவே, அத்தியாவசிய மருந்துகளின் விலையை நிகழாண்டில் நிறுவனங்கள் உயர்த்தாது.  இது மோடியின் உத்தரவாதம்”  என்றார்.

Tags :
Advertisement