Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

06:52 PM Nov 04, 2023 IST | Web Editor
Advertisement

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் பதிவான புகாரின் பெயரில் தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார். அதன் முதல் மின்னஞ்சலில் அம்பானியிடம் ரூ.20 கோடி கோரிக்கை விடுக்கப்பட்டது. இரண்டாவது மின்னஞ்சலில் 10 மடங்கு அதிகரித்து ரூ.200 கோடியாக இருந்தது. இறுதியாக மூன்றாவது மெயிலில் ரூ.400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து அம்பானியின் பாதுகாப்புக் குழு தலைவர், மும்பை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபர்தி என்பவர் கைது செய்யப்பட்டு நவ.8 வரை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அந்த மின்னஞ்சல் முகவரி சஹாதப் கான் என்பவருக்கு சொந்தமானது என்றும் பெல்ஜியத்தில் இருந்து அனுப்பட்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்யப்போவதாகவும், ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகா்க்கப்போவதாகவும் தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இது தொடா்பாக பிகாரைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
முகேஷ்அம்பானிDeath ThreatEmailMukesh ambaniNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article