For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீர்ப்பு வழங்கி கொண்டிருந்த நீதிபதி மீது திடீரென பாய்ந்த நபர் | அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள்!...

01:06 PM Jan 04, 2024 IST | Web Editor
தீர்ப்பு வழங்கி கொண்டிருந்த நீதிபதி மீது திடீரென பாய்ந்த நபர்   அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள்
Advertisement

தீர்ப்பு வழங்கிக்கொண்டிருந்த நீதிபதி மீது திடீரென பாய்ந்த நபர் அவரை தாக்கிய சம்பவம்  அதிச்சியை ஏற்படுட்தியுள்ளது.  

Advertisement

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்த நீதிபதியை குற்றவாளிகள் தாக்கினர். அங்கு நிலைமை பயங்கரமாக மாறியது. குற்றவாளிகள் தாக்கியதில் நீதிபதி மற்றும் அவரது உதவியாளர் லேசான காயம் அடைந்தனர்.  உடனடியாக பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும் .

நீதிபதி மேரி கே ஹோல்தஸ் லாஸ் வேகாஸில் உள்ள கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் வழக்கைத் தலைமை தாங்கினார். குற்றம் சாட்டப்பட்ட தியோப்ரா ரெட்டன் (30) மீது கடந்த காலங்களில் பல குற்ற வழக்குகள் உள்ளன. சமீபத்திய வழக்கில், ரெட்டனின் வழக்கறிஞர் விசாரணை நிலுவையில் உள்ள நன்னடத்தை தண்டனையைக் கேட்டார். ஆனால், நீதிபதி ஹோல்தஸ் மறுத்துவிட்டார்.

ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. அவர் மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்கிறார், அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி ரெட்டன்ர் நீதிபதி மீது பாய்ந்தார். இதனால் நீதிபதி ஹோல்தஸ் தரையில் விழுந்தார். உடனடியாக உஷார்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர், குற்றவாளிகளை இழுத்துச் சென்றனர். இந்தச் சண்டையில் அமெரிக்கக் கொடியும், நெவாடா மாநிலக் கொடியும் தரையில் விழுந்தன. மேலும். குற்றம் சாட்டப்பட்டவர் ஹோல்தஸை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்.

ரெட்டன் தாக்கப்பட்ட சம்பவம் முழுவதும் நீதிமன்றத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியைத் தாக்குவதும், கூச்சலிடுவதும், பாதுகாப்புப் பணியாளர்களால் இழுத்துச் செல்லப்படுவதும், தாக்கப்படுவதும் தெளிவாகக் காணப்படுகின்றன. எனினும், நீதிபதி ஹோல்தஸ் மற்றும் அவரது உதவியாளர் தாக்குதலில் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

Advertisement