Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கெடு விதித்த பி.பி.டி.சி நிர்வாகம்!

08:00 AM Jun 12, 2024 IST | Web Editor
Advertisement

45 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என பி.பி.டி.சி நிர்வாகம் மாஞ்சோலை மக்களுக்கு கெடு விதித்துள்ளது.

Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் முடிவதற்கு இன்னும் 4 ஆண்டுகளே உள்ள நிலையில், மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியது.

இந்த உத்தரவை தொடர்ந்து, மாஞ்சோலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வெளியில் அனுப்பும் பணிகளை பி.பி.டி.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Tags :
mancholi workersTirunelveli
Advertisement
Next Article