For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன் - பெண் மருத்துவர் கொடுத்த கொடூர தண்டனை!

11:18 AM Jul 02, 2024 IST | Web Editor
நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன்   பெண் மருத்துவர் கொடுத்த கொடூர தண்டனை
Advertisement

பெண் மருத்துவரிடம் நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுக்கு அந்த மருத்துவர் கொடுத்த வினோத தண்டனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலத்தில் மருத்துவராக இருக்கும் காதலி ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலனின் பிறப்புறுப்பை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தியால் அறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 26 வயதான பெண் மருத்துவர்  30 வயது இளைஞர் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய நபர், தனது காதலியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இதன் காரணமாக இரண்டு முறை கர்ப்பம் தரித்த அந்த பெண் மருத்துவர்  கர்ப்பத்தை கலைத்தும் உள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி  காதலனை பெண் மருத்துவர் வற்புறுத்தியுள்ளார். இதனை பொருட்படுத்தாத அந்த இளைஞருக்கு இறுதி வாய்ப்பாக ஜூலை 1 வரை காலக்கெடு விதித்து தன்னை பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். இதற்காக சார்பதிவாளர் அலுவலகம் வர வேண்டுமென தன் காதலனை மருத்துவர் தெரிவித்துள்ளார். நேற்று வெகுநேரமாகியும் பதிவுத் திருமணம் செய்ய வராத காரணத்தால் பெண் மருத்துவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தனது காதலனை தொடர்புகொண்ட அவர், வழக்கம்போல தன்னை சந்திக்க தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து
அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்ற பெண் மருத்துவர், அவருக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் அந்த இளைஞரின் பிறப்புறுப்பை அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் வெட்டி அறுத்துள்ளார்.

மயக்கத்தில் இருந்த நபருக்கு இரத்தம் அதிகளவில் வெளியேறியதால் பதறிப்போன மருத்துவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரிடமிருந்த கத்தியை கைப்பற்றியதுடன் பெண் மருத்துவரை கைது செய்தனர்.

மருத்துவமனையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் உடனடியாக சாப்ரா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து உயர்சிகிச்சைக்காக, பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement