For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தன்னம்பிக்கையை மட்டுமே வைத்து சாதித்தவர் #HipHop ஆதி" - இயக்குநர் சுந்தர். சி புகழாரம்!

09:23 PM Sep 11, 2024 IST | Web Editor
 தன்னம்பிக்கையை மட்டுமே வைத்து சாதித்தவர்  hiphop ஆதி    இயக்குநர் சுந்தர்  சி புகழாரம்
Advertisement

தன்னம்பிக்கையை மட்டுமே வைத்து சாதித்தவர் ஹிப்ஹாப் ஆதி என இயக்குநர் சுந்தர். சி தெரிவித்தார்.

Advertisement

மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் தனது 8வது திரைப்படத்தின் பெயரை அறிவித்தார். ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு, “கடைசி உலகப் போர்” எனப் பெயரிட்டுள்ளது.

இதன் முதல் பார்வை போஸ்டர் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்தப் படத்தின் முதல் பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். இந்நிலையில், இப்படம் செப். 20 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் நட்டி (எ) நட்ராஜ் ,நடிகர் தலைவாசல் விஜய்,நடிகர் சிங்கம்புலி ,நடிகர், நடன இயக்குனர் கல்யாண் , ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர். சி கூறியதாவது :

"என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் எனக்கு கண்ணீர் வருகிறது. தன்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்து  வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தரும் அளவு என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நட்டி (எ) நட்ராஜ் கூறியதாவது :

"இந்தப்படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர் சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன். இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய் கூறியதாவது :

"மூன்று நாள் தான் நடித்தேன். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது, பிரமிப்பாக இருக்கிறது. இந்த டீம் அத்தனை தெளிவாக இருக்கிறார்கள். இந்தப்படம் பார்க்கும் போது  நம் பார்லிமெண்ட் ஞாபகம் வரும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : AsianChampionsCupHockey : மலேசியாவை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி!

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிங்கம்புலி கூறியதாவது :

"ஹிப் ஹாப் ஆதியை முதன் முதலில் சுந்தர்.சி சாருடன் தான் பார்த்தேன். உங்களை மிகவும் பிடிக்கும், என் முதல் படத்திலிருந்து உங்களை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். இந்தப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும். இந்தப்படத்தில் நடிக்கும் போது அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொண்டார். ஒரு கமர்ஷியல் படத்தை எடுப்பதை விட்டுவிட்டு, கடைசி உலகப்போர் என ஒரு அழுத்தமான படத்தை எடுக்கும் அவரது மனதுக்கு வாழ்த்துகள். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, ஆதிக்கு அம்மை வந்துவிட்டது ஆனாலும் ஷூட்டிங் வர்றேன். ஆனால் நான் தான் அவரை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தேன்.  அவரது அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை அனகா கூறியதாவது :

"ஆதி உடன் இரண்டாவது படம், கதையே மிக வித்தியாசமாக இருந்தது, நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள், ஆதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான ரோல், படக்குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். எல்லோருக்கும் நன்றி. ஜீவா முதல் படக்குழு அனைவருக்கும் நன்றிகள். இந்தப்படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும் நன்றி"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஹிப் ஹாப் தமிழா ஆதி கூறியதாவது :

"என்னை அறிமுகம் செய்த சுந்தர் சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார். இந்தப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும்.  இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான், அனைவருக்கும் என் நன்றிகள். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement