For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

04:23 PM Jul 03, 2024 IST | Web Editor
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி
Advertisement

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினரை நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். 

Advertisement

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது. அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர். பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர்.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் நாளை அதிகாலை டெல்லி வந்தடையும்.

இந்நிலையில் நாளை காலை இந்தியா வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். நாளை காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாலை மும்பை செல்கின்றனர். வான்கடே மைதானத்தில் பேரணியாக வரவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags :
Advertisement