For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது" - சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி!

01:58 PM Jul 06, 2024 IST | Web Editor
 ஹத்ராஸ் சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது    சம்பவம் நடைபெற்று 5நாட்களுக்கு பின் போலே பாபா பேட்டி
Advertisement

ஹத்ராஸில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என 5நாட்களுக்கு பின் ஊடகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு, சேவகர்களாக பணியாற்றியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் மதுகரைக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,  இச்சம்வத்துக்கு பிறகு சாமியார் போலே பாபா முதன்முறையான ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.  இது குறித்து போலே பாபா அளித்த பேட்டியில் கூறியதாவது,

"ஹத்ராஸில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதில் இருந்து மீண்டுவர கடவுள் சக்தி அளிக்க வேண்டும். இதுபற்றி விசாரித்து வரும் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.  குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தப்ப முடியாது என நான் நம்புகிறேன்.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கும்படி என் குழு உறுப்பினர்களை நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.  அரசின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அனைவரது கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement