For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்..!

07:29 AM Dec 19, 2023 IST | Web Editor
1800 கிலோ உணவு பொருட்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்
Advertisement

1800கிலோ மதிப்பிலான உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வழங்குவதற்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

1800கிலோ மதிப்பிலான உணவு பொருட்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு வழங்குவதற்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது . கோவை சூலூரில் இருந்து தமிழக அரசின் சார்பாக வெள்ளம் பாதித்த திருநெல்வேலி,தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் 1800 கிலோ மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 24 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு வானிலை மிக மோசமாக இருந்ததால் மதுரை விமான நிலையத்தில் நேற்று இரவு 9.40 மணியளவில் இந்திய விமான படை ஹெலிகாப்டர் ஆனது தரையிறக்கப்பட்டது.

இன்று காலை 6 மணி அளவில் 1800 கிலோ உணவுகளுடன் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்  புறப்பட்டு வெள்ளம் பாதித்த முக்கிய பகுதிகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களான பால், பிரட், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை வழங்கப்பட உள்ளன

இந்த ஹெலிகாப்டர் மதுரை மாவட்டத்தில் இருந்து கிளம்பி சரியாக 20 நிமிடங்களில் திருநெல்வேலி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிகவும் தண்ணீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாத பகுதிகளில் சென்று பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement