Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை! சவரன் ரூ.51,000-ஐ கடந்தது!

10:05 AM Mar 29, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையாகிறது. 

Advertisement

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள் : லிங்குசாமி கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்குன ‘அஞ்சான்’ படம் ரீரிலீஸ்! 

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை  நேற்று  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும்,  சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390-க்கும்,  சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் முதன்முறையாக ரூ. 50,000ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில்,  புதிய உச்சத்தை அடைந்ததால்,  தங்கம் வாங்குவோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ChennaiGoldpriceGoldPriceTodayGoldRate
Advertisement
Next Article