"வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி குறையும்" - இயக்குனர் ராம் பேட்டி!
கோவை விமான நிலையத்தில் "பறந்து போ" திரைப்படத்தின் இயக்குனர் ராம் மற்றும் நடிகர் சிவா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் ராம் பேசுகையில், "இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டது கோவையில் தான், முதல் நாள் சூட்டிங் கோவையில் தான் நடைபெற்றது. கோவை சுற்றுவட்டார பகுதியில் இந்த படம் எடுக்கப்பட்டு தற்போது வெற்றியாக உருவெடுத்து இருக்கிறது.
உலகம் முழுவதும் இந்த படம் வெற்றி அடைந்திருக்கிறது, இந்த படத்தை வெற்றிப்படமாக கொடுத்த மக்களுக்கு நன்றி. புதிய முயற்சிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றி". எப்பொழுதும் சீரியஸாக இருக்கும் ராம் எப்படி இது போன்ற கலகலப்பான படத்தை எடுக்க முடிந்தது என்ற கேள்விக்கு,
கோவையால் தான் கலகலப்பான படத்தை தன்னால் கொடுக்க முடிந்தது, இங்கு இருக்கும் மக்களால்தான் என்றார். எந்த நடிகர் வந்தாலும் அவருடைய பலம் கதையில் வர வேண்டும், சிவாவை இதில் பயன்படுத்தி இருக்கின்றேன். நான்கு படம் தான் எடுத்திருக்கிறன், ஐந்தாவது படமாக "பறந்து போ" படத்தை
எடுத்திருக்கிறோம்.
பேய் படமும் இனி எடுப்போம், இந்த முறை படம் பெரிய வெற்றி அடைந்திருப்பதால், வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி கண்டிப்பாக குறைந்து போகும் என்று தெரிவித்துள்ளார். நடிகர் சிவாவும் இதே கோரிக்கையை இயக்குனர் ராமிடம் முன் வைத்தார். அப்போது அதிகப்படியான படங்களை இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவா, இயக்குனர் ராமிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் ராம் "பறந்து போ" படம் தொடர்ந்து நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்பதை தொடங்கி வைத்து உள்ளது.
வணிக ரீதியான பெரிய வெற்றி அந்த கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது. உண்மையில் குழந்தைகள் பெற்றொர்கள் சேர்ந்து பார்க்கும் படம், வாழ்க்கையை கொண்டாட, சொல்கின்றது பறந்து போ திரைப்படம் என தெரிவித்துள்ளார்.