For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒகேனக்கல்: நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரிப்பு!

09:35 AM Jun 03, 2024 IST | Web Editor
ஒகேனக்கல்  நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரிப்பு
Advertisement

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கன அடியில் இருந்து 2000 கன அடியாக அதிகரித்ததிருக்கிறது.

Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நான்கு
மாதங்களாக நீர்வரத்து 1000 கன அடி முதல் 800 கனஅடி வரை மட்டுமே நீர்வரத்து இருந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆறு ஆங்காங்கு சிறு சிறு தண்ணீர் தேங்கி குட்டைகளாக காட்சியளித்தது.

கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைமழை பெய்து வருவதால் தமிழ்நாடு - கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது.

இதையும் படியுங்கள் : தேர்தல் முடிந்த கையோடு உயர்த்தப்பட்ட பால் மற்றும் சுங்க கட்டண விலை; அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2000 கனஅடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் கடந்த 31-ந் தேதி நீர்வரத்து சரிந்து 800 கன அடியாக இருந்தது. இதையடுத்து, தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Tags :
Advertisement