Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

06:00 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அப்படிப்பட்ட இந்த கோயிலின் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு
அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை
அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
ராதாகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் இன்று
விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்,

“கோயில் அடிவாரத்தை சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து 139 ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கியவுடன், ஆக்கிரமிப்பு நிலங்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று இடத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள், தங்கள் பெயரில் மாற்று இடத்திற்கான
பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மறுக்கின்றனர். அப்போது தான் மாற்று இடத்திற்கு செல்ல சம்மதிப்போம், என கையொப்பமிட
மறுக்கின்றனர். இதனால்தான் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதமாகிறது” என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள்,

“பழனி கோயிலை சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள 139
ஆக்கிரமிப்பாளர்களில், மாற்று இடம் செல்ல சம்மதம் தெரிவித்து கையொப்பம்
இடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்.

மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு 24
மணி நேர கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின் ஆக்கிரமிப்பாளர்களை, தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாசில்தார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags :
HighCourt Madurai BranchInvadersmurugan templePALANI
Advertisement
Next Article