Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குழந்தையின் பாலினம் அறிய மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

07:20 PM May 25, 2024 IST | Web Editor
Advertisement

மனைவியின் வயிற்றில் உள்ளது என்ன குழந்தை என்பதை கண்டறிய அவரின் வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் புடானில் வசித்து வருபவர்கள் பன்னா லால் - அனிதா. இருவருக்கும் திருமணமாகி 22 வருடங்கள் ஆனநிலையில் ஐந்து பெண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அனிதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் பிறக்கும் குழந்தை ஆணாகத்தான் இருக்க வேண்டும் என பன்னாலால் அடிக்கடி அவரது மனைவியிடம் கூறி வந்துள்ளார். இதனால் இருவரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆண்குழந்தைதான் வேண்டும் என்னும் பன்னாலாலின் விருப்பத்தை அறிந்த அனிதா குடும்பத்தினர், அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் மீண்டும் குழந்தையின் பாலினம் குறித்து இருவரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அனிதா அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் அனிதாவின் வயிற்றில் அரிவாளால் வெட்டி குழந்தையின் பாலினத்தை அறிய முயன்றுள்ளார் பன்னாலால்.

தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள தெருவிற்கு ஓடிவந்த அனிதா கூச்சலிட்டுள்ளார். அனிதாவின் சத்தம் கேட்டு அருகில் இருந்து ஓடிவந்த அவரது சகோதரர், அனிதாவை  மருத்துவமனையில் அனுமதித்தார். அதிஷ்டவசமாக அனிதா உயிர்தப்பினார். ஆனால் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. பின்னர் பன்னாலாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அனிதாவின் வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றவாளியான பன்னாவிற்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags :
courtCrimelife sentenceuttar pradesh
Advertisement
Next Article