For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரண்மனை 4 செய்த வசூல்! - எவ்வளவு தெரியுமா?

07:13 PM May 04, 2024 IST | Web Editor
அரண்மனை 4 செய்த வசூல்    எவ்வளவு தெரியுமா
Advertisement

அரண்மனை - 4 திரைப்படத்தின் முதல்நாள் வசூலாக ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் 2ம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து அரண்மனை 3 வெளியானது. இத்திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

நகைச்சுவை கலந்த ஒரு திகில் படமாக உருவாகிய இப்படத்திற்கு சுந்தர் சி – குஷ்பூ இணைத்து அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க  உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட்  ஜெயன்ட் மூவிஸ்’  மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

தற்போது 'அரண்மனை 4' திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 'அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட்' சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார்.

இதையடுத்து மே 3ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களைப் பெற்றாலும் 3ஆம் பாகத்தை விட அரண்மனை 4ஆம் பாகம் மேலானது என்கிற கருத்துகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement