For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கிய குழந்தை... துரிதமாக செயல்பட்டு மீட்ட அக்கம் பக்கத்தினர்..வைரலாகும் வீடியோ!

05:03 PM Apr 28, 2024 IST | Web Editor
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கிய குழந்தை    துரிதமாக செயல்பட்டு மீட்ட அக்கம் பக்கத்தினர்  வைரலாகும் வீடியோ
Advertisement

பெற்றோரின் அலட்சியத்தால், அடுக்குமாடி குடியிருப்பின் கூரையிலிருந்து கீழே
விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கிய குழந்தையை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

சென்னையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பூம்பொழி நகரில், அடுக்குமாடி
குடியிருப்பில் வசிக்கும் தம்பதியரின் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கூரையின்
மேலே விழுந்துள்ளது. அந்தக் கூரையிலிருந்து வழுக்கி கொண்டே தரையில் விழும்
சூழ்நிலைக்கு சென்ற குழந்தையை காப்பாற்ற, அந்த குடியிருப்பு வாசிகள் போராடும்
வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அக்கம்பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்பதற்காக கீழே பெட் சீட்டுடன்
காத்திருக்கும் நிலையில், சில ஆண்கள் மாடியின் பக்கவாட்டு கம்பிகள் மீது ஏறி குழந்தையை பத்திரமாக மீட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவம் எப்போது நடந்தது, பெற்றோர்கள் யார்? ஏன் இவ்வளவு அலட்சியத்தில் குழந்தையை தவற விட்டார்கள்? என்கிற கோணத்தில் இணையத்தில் பொதுமக்கள் பெற்றோர்களை விமர்சித்து வருகின்றனர்.

குழந்தை பெற்றால் மட்டும் போதுமா இவ்வளவு அலட்சியமாக செயல்படக்கூடிய அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Tags :
Advertisement