Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"காவல்துறையில் உள்ள முறைகேடுகளை முதலமைச்சர் தீர்க்க வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன்!

காவல்துறை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
12:45 PM Jun 20, 2025 IST | Web Editor
காவல்துறை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராடிக் கொண்டு வருகிறார்கள். அங்கன்வாடிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதான் உங்களுடைய அரசாங்கத்தின் நிலைமை, செல்வப் பெருந்தகை கூறுகிறார், இந்தி கூட்டணியில் ஓட்டை விழவில்லை, போரில் கூட ராகுல் காந்தி அரசியல் செய்கிறார்.

Advertisement

நாங்கள் அனைவரும் முருகர் பக்தர்கள், நாங்கள் மாநாடுக்கு போகுவதற்கு உங்களுக்கு ஏன் பதற்றம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதட்டத்தில் உள்ளார். அமைச்சர் சேகர்பாபு பதட்டத்தில் உள்ளார். தமிழக அரசாங்கம், தமிழகம் சார்ந்த அனைவருமே பதட்டத்தில் உள்ளனர்.

அண்ணன் திருமாவளவனே உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிராக மனித சங்கிலி நடத்துகிறீர்கள். வேங்கை வெயிலில் பட்டியலின சகோதர்கள் நலமாக தண்ணீர் குடிப்பதை விடுத்து மலமாக தண்ணீர் குடிக்க வைத்தார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க மனித சங்கிலி நடத்தினீர்களா.

உங்களின் நோக்கம் என்ன. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒதுங்கி போங்கள் நம்பிக்கை உள்ள எண்களை கேள்வி கேட்பது உரிமை உங்களுக்கு இல்லை. கொண்டாட்டத்திற்கு எதிராக அண்ணன் திருமாவளவன் தலைமை தாங்கி மனித சங்கிலி நடத்துகிறார். முதலில் உங்கள் சகோதரர்கள் பாதிக்கப்பட்டதற்கு நீங்கள் மனித சங்கிலி நடத்துங்கள்.

கூட்டணியில் உள்ள கட்சிகள் அண்ணன் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் ஆவதற்கு ஆசை உள்ளது. உங்க கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். 100 ரூபாய் கேஸ் மானியம் கொடுப்பேன் என்று சொன்னீர்கள், ஆனால் கொடுக்கவில்லை. காவல்துறை அதிகாரிகளே கைது செய்வதும், காவல்துறை அதிகாரிகள் பற்றி நீதிமன்ற விவாதம் வருவதும் கவலை அளிக்கிறது. வேங்கை வயல் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. காவல்துறை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறையில் இருக்கிற முறைகேடுகளை முதலமைச்சர் தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCHIEF MINISTERpolice departmenttamilisai soundararajanthirumavalavan
Advertisement
Next Article