For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் வைரல்....

06:13 PM Mar 29, 2024 IST | Web Editor
பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் வைரல்
Advertisement

பாஜகவை விமர்சித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பரப்புரை பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்புமனு தாக்கலும் நிறைவுற்ற நிலையில், தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அனைத்து கட்சியினரும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அதிகமாக தங்கள் நேரத்தை செலவு செய்யும் இணையத்திலும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொள்கின்றனர். இதற்காக ஒவ்வொரு கட்சியும் பிரத்யேக பரப்புரை வீடியோவை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி திமுக தரப்பில் வெளியிடப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் பரப்புரை பாடல் ஒன்று வைரல் ஆகியுள்ளது.

அந்த திமுக பரப்புரை பாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்ட போது நாங்கள் கொடுத்த வரி பணத்தில் இருந்து வெள்ள நிவாரண நிதியை கேட்டால், கடுமையான வார்த்தைகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சிக்கிறார். தமிழ்நாடு செலுத்தும் வரிப்பணம் தமிழ்நாட்டிற்குதானே வரவேண்டும், ஆனால் வரிப்பணத்தை கேட்டும் தராதவர்களுக்கு தேர்தலில் தோல்வியை தான் பரிசாக கொடுக்க வேண்டும். வள்ளுவர் சிலைக்கு காவி நிறம் பூச முயல்பவரை ஓட விட வெண்டும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டாலும் கவலையில்லை, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டாலும் கவலைபடுவதில்லை, டீசல் விலை உயர்வை பற்றியும் கவலைப்படுவதில்லை. ஏழைகள் பற்றியும் கவலைப்படுவதில்லை.

கேஸ் சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கிவிட்டு வெறுமனே பேச்சில் மட்டும் நலன் காப்பதாக பாஜக கூறுகிறது. இதெல்லாம் இப்படி இருக்க எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக பல வருடங்களுக்கு முன் அடிக்கல் நாட்டிவிட்டு கிடப்பில் போடப்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு, அனைத்துவகைகளிலும் இந்தியை திணிக்க முயல்கிறது. மதத்தை வைத்து பிரிக்க முயல்கிறார்கள். வள்ளுவனை அவமதிச்சாங்க, சாதிய வச்சி நம்ம ஒற்றுமையை நாசம் செய்கிறார்கள்.

https://www.facebook.com/news7tamil/videos/290913257363886

பொய்களை ஒதுக்கி கைகளை கோர்ப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலை கேட்போம். நீதியை நிலைநாட்ட, தீமையை ஒழிக்க ஸ்டாலின் குரல் கேட்போம் என திமுகவின் பரப்புரை பாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement