For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் - ஓராண்டுக்கு பிறகு கிடைத்த நீதி!

03:05 PM Aug 04, 2024 IST | Web Editor
கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்   ஓராண்டுக்கு பிறகு கிடைத்த நீதி
Advertisement

ராஜஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை தெருவில் நிர்வாணமாக நடக்கவைத்த வழக்கில், 17 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் நிக்லகோட்டா கிராமத்தில் கடந்த ஆண்டு ஏழுமாத கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் உள்பட 17 பேர் தெருவில் நிர்வாணமாக நடக்கவைத்து துன்புறுத்தியுள்ளனர்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.  இதனையடுத்து அந்த பெண் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் மாநில காவல்துறையால் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு,  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  ஒரு ஆண்டுக்கு பிறகு அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது.  அதன்படி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அப்பெண்ணின் கணவர் உட்பட 14 ஆண்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து ராஜஸ்தானில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்புக்கு பிறகு, இந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் மணீஷ் நாகர் பேசியதாவது, "இதே போன்ற கொடூரமான குற்றம் மணிப்பூரிலும் நடந்தது.  இத்தகைய குற்றங்கள் பெண்களுக்கு உணர்ச்சி ரீதியான காயங்களை ஏற்படுத்துகின்றன.  பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.  அப்போதுதான் குற்றங்கள் குறையும்.

பண்டைய வேதங்களில் பெண்கள் கௌரவிக்கவிக்கப்படுகின்றனர்.  ஆனால், கலியுகத்தில் பெண்கள் மீது வன்முறையும் அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார்.  இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதலமச்சர் அசோக் கெலாட் ரூ.10 லட்சம் இழப்பீடும்,  அரசு வேலையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement