For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதாகும்” - குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, அதன் மொழியை அழிப்பதாகும்” என துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
03:16 PM Feb 21, 2025 IST | Web Editor
“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி  மொழியை அழிப்பதாகும்”    குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
Advertisement

அண்மையில் மராத்திய மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. அம்மொழியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு இன்று தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Advertisement

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்களும் புத்தகக் கண்காட்சியும், கலாச்சார நிகழ்ச்சிகளும் கலந்துரையாடல்களும், நடைபெற உள்ளன. இதில் இலக்கியத்துறையில் பிரபலமானவர்கள் பங்கேற்கின்றனர். 71 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகர் டெல்லியில் மராத்திய இலக்கிய மாநாடு நடைபெற உள்ளது.

இதனிடையே நேற்று இம்மாநாட்டின் பிரதிநிதிகளோடு துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,

“ஒரு நாடு அதன் கலாச்சாரம் மற்றும் அதன் கலாச்சார நெறிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது. உலகில் எந்த ஒரு நாடுடனும் நம்மை இதில் ஒப்பிட முடியாது. கலாச்சாரத்தில் இந்தியா தனித்துவமானது. நமது கலாச்சாரத்தையும், மொழிகளையும் வளர்ப்பது நமது வரையறுக்கப்பட்ட கடமை.

இலக்கியத்தைப் பாதுகாப்பதில் கடினமாக ஈடுபடும் மக்களைக் கைகோர்த்துப் பிடிப்பதன் மூலம் மட்டுமே, இந்த மலர்ச்சியை உறுதி செய்ய முடியும்” என தெரிவித்தார்.

மேலும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு பற்றிப் பேசிய அவர்,

“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, அதன் மொழியை அழிப்பதாகும்” என்றார். மேலும் ஆங்கிலேயர்கள் நமது மொழிக்காக, நமது கலாச்சாரத்திற்காக, நமது மத இடங்களுக்காக மிகவும் அடக்குமுறை, மிகவும் கொடூரமான, மிருகத்தனமானவர்களாக இருந்தனர்.

காட்டுமிராண்டித்தனமும், பழிவாங்கும் மனப்பான்மையும் உச்சத்தில் இருந்தன. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து மிகப்பெரிய தன்மையைக் காணலாம். நம்மை காயப்படுத்த, நமது வழிபாட்டுத் தலங்களின் மீது தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டினர். நமது மொழிகளை விரக்தியடையச் செய்தனர். நமது மொழி செழிக்கவில்லை என்றால், நமது வரலாறும் செழிக்காது” என்றார்.

இந்த நிகழ்வில் தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சரத் பவார் மற்றும் அவரது எம்.பி. மகள் சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement