Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்!” - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

05:14 PM Feb 20, 2024 IST | Web Editor
Advertisement

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Advertisement

சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும்,  பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.  பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன.  INDIA கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன.  இருப்பினும் INDIA கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.  அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில்,  சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.  குறிப்பாக, சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறியிட்டது ஏன் என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது முதன்முறை என்பதால் இந்த வழக்கு தேசிய கவனம் பெற்றது.

இந்நிலையில், இன்று (பிப்.20) மீண்டும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவரை மேயராக தேர்வு செய்வதற்காக எட்டு வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்திய அதிகாரி வேண்டுமென்றே சிதைத்து இருக்கிறார்.  எனவே அவர் அறிவித்த சண்டிகர் தேர்தல் முடிவு ரத்து செய்யப்படுகிறது.  மேலும் தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாக்குகள் மனுதாரரான ஆம் ஆத்மிக்கு ஆதரவானவை.  எனவே அந்த நபர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்,  அந்த வகையில் ஆம் ஆத்மி வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.

தேர்தல் நடத்திய அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு,  தேர்தல் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க தங்களது உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்துவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக,  மேயர் பதவியை பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் ராஜிநாமா செய்திருக்கிறார்.  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பூனம் தேவி,  நேகா முஸ்வாத்,  குர்சரண் கலா ஆகிய 3 கவுன்சிலர்களும் 18-ம் தேதி மாலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவடேவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.  இத்தகைய அரசியல் பரபரப்புகள் ஒருபுறம் இருக்க,  உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஏற்படுத்தப்போகும் மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags :
Aam aadmiBJPChandigarChandigarh Mayor ElectionCJI ChandrachudCJI DY Chandrachudhorse tradingnews7 tamilNews7 Tamil UpdatesSupreme Court of india
Advertisement
Next Article