For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலம்!

தூத்துக்குடி பணிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா இன்று
09:54 AM Jul 26, 2025 IST | Web Editor
தூத்துக்குடி பணிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா இன்று
பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலம்
Advertisement

Advertisement

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா இன்று (ஜூலை 26, 2025) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பமானது.

காலை நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீவன் தலைமையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு இறை ஆசீர்வாதம் பெற்றனர்.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத்தின் போது, உலக சமாதானத்தை வலியுறுத்திப் புறாக்களும் பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன. இது பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது.

மேலும் பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்புத் திருப்பலிகள், மறையுரைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டு அன்னை மரியாளின் அருளைப் பெறுவார்கள்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று புகழ்பெற்ற சப்பர பவனி நடைபெற உள்ளது. வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னை மரியாள் திருவுருவம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும்.

இந்த சப்பர பவனியைக் காண லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி சப்பர பவனி நடைபெறும் நாள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னை மரியாளை தரிசிக்க வாய்ப்பு ஏற்படும். இந்தப் பாரம்பரியத் திருவிழா தூத்துக்குடி மக்களின் வாழ்வில் ஒரு முக்கியப் பகுதியாகத் திகழ்கிறது.

Tags :
Advertisement