For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தவெக சார்பில் இன்று 3ம் கட்ட கல்வி விருது விழா!

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.
07:45 AM Jun 13, 2025 IST | Web Editor
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.
தவெக சார்பில் இன்று 3ம் கட்ட கல்வி விருது விழா
Advertisement

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வந்தார். அந்த வகையில் இந்தாண்டு முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழா கடந்த 30ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

Advertisement

தொடர்ந்து, 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் கடந்த ஜுன் 4ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று (ஜுன் 13) நடைபெறுகிறது.

            இன்று கல்வி விருது வழங்கப்படவுள்ள சட்டமன்றத் தொகுதிகள்

இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக 30.05.2025 அன்றும், இரண்டாம் கட்டமாக 04.06.2025 அன்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து. மூன்றாவது கட்ட விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் இன்று (13.06.2025) நடைபெற உள்ளது.

                  இன்று கல்வி விருது வழங்கப்படவுள்ள சட்டமன்றத் தொகுதிகள்

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். எதிர்காலச் சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்”

இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement