For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாத்தா டி.ஆர்.பாலுவுக்கு வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த பேரன்!

12:18 PM Apr 19, 2024 IST | Web Editor
தாத்தா டி ஆர் பாலுவுக்கு வாக்களிக்க லண்டனில் இருந்து வந்த பேரன்
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தனது தாத்தா டி ஆர் பாலுவிற்கு வாக்களிப்பதற்காக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் அவரது பேரன் சூர்யா சென்னை வந்தார்.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  அதே போன்று அரசியல் கட்சி தலைவர்கள்,  வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  திமுக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி ஆர் பாலுவின் பேரனும் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகனுமான சூர்யா லண்டனில் படித்து வருகிறார். அந்தவகையில்,  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தனது தாத்தா டி ஆர் பாலுவி ற்கு வாக்களிப்பதற்காக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் சூர்யா சென்னை வந்தார். இந்த நிலையில் இன்று சென்னை பீர்க்கங்கரணையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சூர்யா தனது தாத்தா டி.ஆர்.பாலு மற்றும் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

Tags :
Advertisement