For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#9YearsofNaanumRowdyDhan | “எனது வாழ்வை ஆசிர்வதிக்க வந்தப் படம்...”  என நயன்தாரா நெகிழ்ச்சி!

04:12 PM Oct 22, 2024 IST | Web Editor
 9yearsofnaanumrowdydhan   “எனது வாழ்வை ஆசிர்வதிக்க வந்தப் படம்   ”  என நயன்தாரா நெகிழ்ச்சி
Advertisement

‘நானும் ரௌடி தான்’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான படம் அண்ணப்பூரணி. தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இதனிடையே மகன்களுடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். நானும் ரௌடிதான் படத்தின் மூலம் அறிமுகமாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நானும் ரௌடி தான் படம் கடந்த 2015ஆம் ஆண்டு அக்.21ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தனது வாழ்க்கையை மாற்ற வந்த படம் என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“என் வாழ்க்கையை ஆசிர்வதிக்கவும், மாற்றவும் வந்த திரைப்படம். ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இப்படம் வெளியானது. மக்களிடம் இருந்து புதிய அன்பை பெற்றுக் கொடுத்த படம். எப்போதும் மறக்க மாட்டேன். நடிகையாக புதிய பாடங்கள், அனுபவங்கள், புதிய நினைவுகள். அத்துடன் புதிய உறவு. எனக்கு இந்தப் படத்தையும், என்னவனையும் கொடுத்த விக்னேஷுக்கு நன்றி.

நினைவுகளுடன் நான் சேகரித்து வைத்திருந்த சில புகைப்படங்களை பகிர்கிறேன்’ என நடிகை நயன்தாரா பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement