For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
08:50 AM Feb 11, 2025 IST | Web Editor
வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
Advertisement

முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது.

Advertisement

தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூசம் திருவிழா கொண்டாப்படுகிறது. அதுவும் இந்தாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதியன்று பழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

இதையடுத்து நேற்று 6ஆம் நாளில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருமண வைபோகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று தைப்பூச முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் உள்ளது. தைப்பூச திருநாளையொட்டி அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை மேற்கொண்டும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தைப்பூச நாளையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பாலால், முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அந்தவகையில், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக சிறப்பு வரிசைகளும், வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடபழனி முருகன் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவியத் தொடங்குவார்கள் என்பதால் போலீஸார் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். தைப்பூசத்தையொட்டி, இரவு 8.30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. காலை5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement