இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்
தவெக கட்சி தலைவர் விஜய் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,
1. தமிழக வெற்றிக் கழகம் ("TVK") சார்பாக உங்கள் அவசர தலையீட்டைக் கோரி கடிதம் எழுதுகிறேன். தவெக தமிழ்நாடு முழுவதும் ஒரு வெளிப்படையான இருப்பை நாங்கள் நிறுவியுள்ளது. மேலும் மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தல்களிலிலும் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற பார்வையின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு அங்கமாக அமைவதாக எங்கள் மரியாதையுடன் வலியுறுத்துகிறோம்.
2. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் நாங்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதில் இருந்து TVK விலக்கப்படுகிறது. இது பங்கேற்பில் சமத்துவத்தை குறைக்கிறது.
3. மாநிலத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் கூட்டும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெக சேர்க்கப்படாதது, தேர்தல் செயல்முறைகளின் கண்காணிப்பில் ஒரு முக்கியமான வாக்காளர் பகுதியை பங்கேற்பிலிருந்து விலக்குகின்ற விளைவுகளை உருவாக்குகிறது என்பதை மேலும் சமர்ப்பிக்கிறோம்.
4. வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளின் உயர்ந்த தரத்தைக் காக்கும் நோக்கத்தில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் தவெகவிற்கு தக்க அறிவிப்பு வழங்கி, அவற்றில் பங்கேற்க அழைக்க வேண்டுமென மிகுந்த தாழ்மையுடன் கோருகிறோம். நியாயமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு தவெக அதன் முழு ஒத்துழைப்பு, நுண்ணறிவு மற்றும் கருத்துக்களை வழங்க தயாராக உள்ளது.
5. எனவே, இந்த தேர்தல் முறையை மேம்படுத்தும் பொது நோக்கில் எவருக்கும் பாதகமில்லாத இந்த நியாயமான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 இன் கீழ் உங்களது மேற்பார்வை அதிகாரங்களின் கீழ், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு அரசு ஆகியோருக்கு பொருத்தமான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கூட்டப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களிலும் தவெக முறையாக சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளார்.