For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!- 6 பேர் உயிரிழப்பு!

03:55 PM Apr 25, 2024 IST | Web Editor
பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து     6 பேர் உயிரிழப்பு
Advertisement

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 

Advertisement

பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். கட்டடத்தில் தீ பற்றியது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

இதையும் படியுங்கள் : ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்த பிசிசிஐ பரிசீலனை!

இதையடுத்து கட்டடத்துக்குள் இருந்து கிட்டத்தட்ட 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தீயணைப்புத் துறை துணை இயக்குநர் கூறுகையில்,

"இதுவரை இப்பகுதியில் உள்ள 16,000 விடுதிகளில் ஆய்வு நடத்தி அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளோம். ஆய்வு நடத்த வேண்டிய விடுதிகளின் பட்டியலில் இந்த விடுதியும் உள்ளது. நாங்கள் கொடுக்கும் அறிவுறுத்தல்களை ஒரு சில விடுதிகள் செய்கின்றன. பல விடுதிகள் செய்வதில்லை. முதற்கட்ட தகவலின்படி, சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம்"

இவ்வாறு தீயணைப்புத் துறை துணை இயக்குநர் தெரிவித்தார்.

Tags :
Advertisement