For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகை அஞ்சலியின் தெலுங்கு இணையத் தொடர்: 3 நாட்களில் 350 லட்சம் பார்வை!

01:52 PM Jul 27, 2024 IST | Web Editor
நடிகை அஞ்சலியின் தெலுங்கு இணையத் தொடர்  3 நாட்களில் 350 லட்சம் பார்வை
Advertisement

நடிகை அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு இணையத் தொடர் 3 நாளில் 350 லட்சம் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ள நிலையில், அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement

கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம், இறைவி உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகை அஞ்சலி. எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர். தமிழில் கதைநாயகியாக ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

தற்போது, தன் 50-வது திரைப்படமான ‘ஈகை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். 39 வயதாகும் அஞ்சலி பக்‌ஷிகரனா என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார். இது ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 19ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில் அஞ்சலி அந்தரங்க காட்சிகளில் நடித்துள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதையும் படியுங்கள் : நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு!

இந்நிலையில் இந்தத் தொடர் 3 நாளில் 350 லட்சம் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதாக தனது சமூகவலைதள பக்கத்தில் நடிகை அஞ்சலி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :

"அன்பு ரசிகர்களே, என்னுடைய புதிய தெலுங்கு இணையத்தொடரான பக்‌ஷிகரனா ஜீ5 ஓடிடியில் 3 நாளில் 350 லட்சம் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளன. புஷ்பாவாக நடிப்பது சவாலானது. எனக்கு அந்த சவால் பிடித்திருந்தது. எங்களது கதையை நீங்கள் எடுத்துகொண்ட விதம் பிடித்திருக்கிறது. நீங்கள் எனக்கு தரும் ஆதரவும் உற்சாகமும் என்னை இன்னும் புதிய புதிய கதாபாத்திரங்களில் நடிக்க தூண்டுகிறது. அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
Advertisement