For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு!

2024-25 ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 48,344 கோடி தமிழக அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:58 AM Apr 22, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ 2 489 கோடி அதிகரிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2489 கோடி அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய்  கிடைத்துள்ளது.

Advertisement

2021 – 2022ம் நிதியாண்டில் ரூ. 36,050 கோடியும், 2022 – 2023ம் நிதியாண்டில் ரூ.44,121 கோடியும், 2023 – 2024ம் நிதியாண்டில் ரூ.45,855 கோடியும், 2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.48,344 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி 2023 – 2024ம் நிதியாண்டை விட, 2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.2489 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலமாக 2024-25 -ஆம் ஆண்டில் (31.03.2025 வரை) சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.62.88 கோடி மற்றும் சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.32.52 இலட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மூலம் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், வெளி நாடுகளுக்கு பீர் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த 2024 - 2025 ஆம் ஆண்டில் (31 மார்ச் 2025 வரை), மற்ற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், பிற நாடுகளுக்கு 21,80,465 பெட்டிகள் (cases) பீர் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.777.07 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பீர் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இணைய வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement