Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’....!

03:08 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெயில் இருந்து வந்தது. எனினும் வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்து வந்தனர்.

இதனிடையே, கோடை மழையும் வெப்ப அலையும் சேர்ந்து இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்து வந்தது.

இதையும் படியுங்கள் : கொடைக்கானலில் கோலாகலமாக தொடங்கியது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா - புகைப்படம் தொகுப்பு!

இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று (மே 17) அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில்  பரவலாக மழை பெய்தது.

சிவப்பு நிற எச்சரிக்கை:

இந்நிலையில், இன்று (மே 17) தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 20-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிற எச்சரிக்கை:

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Heavy rainKanyakumariOrange alertRainRamanathapuramred alertTamilNaduThanjavurThoothukudiTirunelveliTiruvarur
Advertisement
Next Article