For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு!

12:21 PM Feb 06, 2024 IST | Web Editor
தஞ்சை மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு
Advertisement

தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு விழா இன்று (பிப்.6) கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் இன்று (பிப். 06) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். போட்டியின் ஆரம்பத்தில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 600 காளைகள் மற்றும் 350 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சைக்கிள், கட்டில், குடம் குவளை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. போட்டியில் தஞ்சை புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாடுபிடி வீரர்களும் மற்றும் காளைகளும் கலந்து கொண்டன.

இதில் சுல்லான் என்ற காளை வீரர்களை தினறடிக்க செய்த நிலையில், மாட்டின் உரிமையாளர் வல்லத்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் மாட்டை தைரியமாக களத்தில் நின்று மாட்டிற்கு கயிறு போட்டு அழைத்து சென்றார். களத்தில் நின்று தைரியமாக விளையாடிய அந்த மாட்டை பாசத்தோடு கயிறு போட்டு கூட்டிச் சென்றது சுற்றி நின்று பார்த்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்களை ஆச்சிரியப்பட வைத்தது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரருக்கு 1 பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement