For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அடுத்த 2 மணி நேரம்…8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு | #IMD எச்சரிக்கை

01:15 PM Oct 22, 2024 IST | Web Editor
அடுத்த 2 மணி நேரம்…8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு     imd எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் நேற்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தொடர்ந்து மத்திய கிழக்கு வங்க கடலில், நாளை மறுநாள் புயலாக வலுவடைய உள்ளது.

இதற்கு கத்தார் நாடு அறிவுறுத்திய “டானா” புயல் என பெயர் வைக்கப்பட உள்ளது. அதன்பின் வடமேற்கு நோக்கி நகர்ந்து 24-ம் தேதி காலை ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :‘ #AjithKumarRacing ’ – நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி மற்றும் லோகோ வெளியீடு!

இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement