For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் #Dhanush - டைட்டில் வெளியானது!

05:45 PM Sep 19, 2024 IST | Web Editor
மீண்டும் இயக்குநராக களமிறங்கும்  dhanush    டைட்டில் வெளியானது
Advertisement

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். தனுஷின் 50-வது படமாக உருவாகிய ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜுலை மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே, தனுஷ் தனது 52வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இது தனுஷ் இயக்கும் 4வது படமாகும். இத்திரைப்படத்தை டாவ்ன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படத்திற்கு 'இட்லி கடை' என பெயரிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement