For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

12:53 PM Feb 21, 2024 IST | Web Editor
சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு   தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

 வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.   தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இது தொடர்பாக அவர் அளித்த மனுவில்,  எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.

அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில்,  தங்களது மனுவிற்கு இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலிலும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் ஜி.கே.வாசன் தாக்கல் மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாள் தள்ளிவைத்தனர்.

Tags :
Advertisement