For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
01:56 PM Jun 19, 2025 IST | Web Editor
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது    முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
Advertisement

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன் 19) தொடக்கிவைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று முதல் ஜூன் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

நிகழ்ச்சி மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

"இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 11.9% ஆகும். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளோம். இன்னுமும் உருவாக்கவுள்ளோம். பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3ம் இடத்தில் உள்ளது. மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருள்கள் உற்பத்தியில் 2-வது இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோரில் பெண்களின் விழுக்காடு 30% ஆகும். இந்தியாவில் 14.90 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6,30,000 பேர் அதாவது 42% பேர் தமிழ்நாட்டுப் பெண்கள் உள்ளனர். கடந்த 2021- 22ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தொழில் வளர்ச்சி, தொழில் துறை, தொழிலாளர் நலனுக்கும் என்ன தேவை என்பதை கண்காணித்து செயல்படுகிறோம்.  திமுக என்றாலே தொழில் வளர்ச்சிதான்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement