Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

” தமிழ்நாட்டின் கல்வி நிதியை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் - செல்வபெருந்தகை வலியுறுத்தல்..!

தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எந்தவொரு நிபந்தனையையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
06:12 PM Sep 21, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எந்தவொரு நிபந்தனையையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வெப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

"இன்று சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட கருத்துகள், தமிழக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் வரலாற்றில் இல்லாத அநீதி ஆகும். “தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படுவதற்கு 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

கல்வி என்பது அரசியலோ அல்லது வணிகமோ அல்ல; அது மக்கள் அடிப்படை உரிமை. ஒன்றிய அரசு, கல்வியை அரசியல் கருவியாக மாற்றி, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவிர்க்க முடியாத பாதிப்புகளுக்கு உட்படுத்துகிறது. இது அநீதியும், அதிகார வன்முறையும் கலந்த, வரலாற்றில் மிகவும் கொடிய செயல்.

எந்தவொரு நிபந்தனையையும் விதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டின் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
educationfundlatestNewsselvaperunthagaiTNnews
Advertisement
Next Article