For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
06:59 AM Apr 21, 2025 IST | Web Editor
3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு  இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, புனித வெள்ளியையொட்டி கடந்த 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை.

Advertisement

தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டப்பேரவைக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணியளவில் தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளிக்கிறார். நிறைவாக தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

Tags :
Advertisement