Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிப்பதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
10:13 AM Feb 18, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள 34,807 நியாய விலைக்கடைகளின் வாயிலாக, மாதம்தோறும்  2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 511 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு வழங்கி வருகிறது.

Advertisement

இவற்றை அரசு வெளிச்சந்தையில் இருந்து அதிக விலைக்கு வாங்கி, நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு மானியத்தில் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்நிலையில், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது.

பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வரும் மார்ச் 6-ம் தேதி கடைசி நாள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
palm oilRation ShopTenderTN Govt
Advertisement
Next Article