For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்" - ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு!

10:37 AM Feb 03, 2024 IST | Web Editor
 தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்    ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement

"தாஜ்மஹால் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்கக் கோரி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

Advertisement

முகலாய பேரரசரான  ஷாஜகான்,  தனது காதல் மனைவி மும்தாஜின் பிரிவை அடுத்து, அவருக்காக எழுப்பிய பிரமாண்ட நினைவிடம் தான் தாஜ் மஹால். 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம்,  ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.

கி.பி. 1632 முதல் 1653 ஆம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. வெண்மை நிறத்தில் அழகிய கட்டிட கலையுடன் கட்டப்பட்ட தாஜ் மகாலை தினசரி லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தாஜ் மஹாலில் உரூஸ் விழா நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டும் பிப்ரவரி 6 முதல் 8ம் தேதி வரை உரூஸ் விழ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  உரூஸ் விழா என்பது நினைவு தினத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதாகும்.  சூபி துறவிகளின் நினைவாக இந்த உரூஸ் விழா நடைபெறுகிறது.

இந்த நிலையில் தாஜ் மஹாலில் நடைபெறும் உரூஸ் விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என அகில பாரத இந்து மகாசாபா அமைப்பு ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  மேலும் இந்த உரூஸ் விழாவிற்கான இலவச அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 4ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்துமகா சபா அமைப்பினர்  “ஆக்ரா நகர வரலாற்றாசிரியர் ராஜ் கிஷோர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளிக்கொணர்ந்த தகவலின் அடிப்படையில்  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாஜ்மஹால் வளாகத்தில் 'உரூஸ்' கொண்டாட்டம் மற்றும் 'தொழுகை' ஆகியவற்றிற்கு முதலில் யார் அனுமதித்தது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு இந்திய தொல்லியல் துறை  முகலாயர்களோ, பிரிட்டிஷ் அரசோ அல்லது இந்திய அரசோ என யாரும் தாஜ்மஹாலில் 'உரூஸ்' கொண்டாட்டத்தை அனுமதிக்கவில்லை," என்று அவர் கூறினார்.

Tags :
Advertisement