For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலகக்கோப்பை அரையிறுதி : டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு - இந்தியா முதலில் பேட்டிங்!

09:28 PM Jun 27, 2024 IST | Web Editor
டி20 உலகக்கோப்பை அரையிறுதி   டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு   இந்தியா முதலில் பேட்டிங்
Advertisement

இந்தியா இங்கிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து,  இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டன. முக்கியமாக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே தகுதிபெறாமல் வெளியேறியது.

அரையிறுதியின் முதல் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.  முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 56 ரன்களுக்கு சுருண்டனர்.  இதன் பின்னர் சொற்ப ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களிலேயே வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கால் பதித்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.  இந்த சூழலில் ஆட்டம் நடைபெறும் கயானாவில் பலத்த மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.  பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்வது நின்றது.

இதனையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது.  அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.  அதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

Tags :
Advertisement