For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில், இந்திய வம்சாவளிகள் சந்தேக மரணம் | கணவன், மனைவி & இரட்டை குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு...!

06:50 AM Feb 15, 2024 IST | Web Editor
அமெரிக்காவில்  இந்திய வம்சாவளிகள் சந்தேக மரணம்    கணவன்  மனைவி  amp  இரட்டை குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு
Advertisement

 அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஒரு வேதனையான செய்தி வெளியாகியுள்ளது. அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்தனர். உயிரிழந்தவர்கள் 42 வயதான ஆனந்த் சுஜித் ஹென்றி, அவரது 40 வயது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 4 வயது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குடும்பத்தினர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கொலை மற்றும் தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணத்திற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.

கணவனும் மனைவியும் குளியலறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக San Mateo பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து 9 மி.மீ துப்பாக்கி மற்றும் மெகசின் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் மற்றும் ஆலிஸ் இருவரும் ஐடி துறையில் பணியாற்றி கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தனர்.  2020 ஆம் ஆண்டில் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.42 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வாங்கி  நியூ ஜெர்சியிலிருந்து சான் மேடியோ கவுண்டிக்கு குடிபெயர்ந்தார்.

நீதிமன்ற பதிவுகளின்படி, ஆனந்த் 2016 டிசம்பரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார், ஆனால் பிரிவினை செயல்முறை நீதிமன்றத்தில் நடைபெறவில்லை. கணவனும் மனைவியும் மிகவும் நட்பாக இருந்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

Advertisement